Saturday 4th of May 2024 05:38:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒப்பந்தக்காலம் முடிந்தும் நிறைவடையாமையால் இருக்கும் பாலத்தின் அபிவிருத்தி -  மக்கள் அதிருப்தி

ஒப்பந்தக்காலம் முடிந்தும் நிறைவடையாமையால் இருக்கும் பாலத்தின் அபிவிருத்தி - மக்கள் அதிருப்தி


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அருகில், A35 பிரதானவிதியிலுள்ள பாலம் கடந்த ஆண்டு 11. 05 .2020 ம் திகதியில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாலத்தின் வேலைகள் மந்தகதியிலேயே நடைபெறுவதனால் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

07.11.2021ம் திகதியுடன் இப்பாலத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இன்றுவரை பாலத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையவில்லை.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாலத்தினை விரைவாக பூர்த்தி செய்து மக்கள் பாவனைக்கு வழங்கவேண்டும் என பலரும் கோருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE